Skip to main content

Posts

10 MISTAKES YOU'RE MAKING AT WORK (AND HOW TO FIX THEM)

10 MISTAKES YOU'RE MAKING AT WORK (AND HOW TO FIX THEM) You’ve worked hard and are perfectly positioned to climb the corporate ladder – but nothing seems to be happening. Worse yet, your job hasn’t just stalled – it’s flat lining, and you don’t know why. Could you be quietly sabotaging your own career? Find Out: 1.  Not switching off your phone:  Unless you’re on deadline, or expecting a life-changing call, consistently checking – or answering – your phone during a meeting is the height of rudeness and bosses HATE it. 2.  Not taking charge of your own career:  Don’t expect your supervisor to plan your job progression for you. You need to know what your goals are, what you need to do to get there and how long it’s going to take. 3.  Not keeping a record of your victories:  Most bosses only care about their bottom line – not your personal job progression. So create a file and document every one of your wins. You’ll need it when it comes to asking for a raise or updatin
Recent posts

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் - சவூதியிடம் இலங்கை கோரிக்கை

சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை  ரத்து செய்து அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை அரசு கோரிக்கை  விடுத்துள்ளது. சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி  அந்த நாட்டு இஸ்லாமிய சட்டத்தின்படி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தமது கணவருக்கு துரோகம் செய்ததாக கூறி சாகும் வரை கல்லால் அடித்து தண்டனையை  நிறைவேற்ற இஸ்லாமிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, மரண தண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு பொது மன்னிப்பு வழங்க  வேண்டும் என இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் குற்றஞ்சாட்டபட்ட நபர் நீதிமன்றத்தில் 4 முறை குற்றத்தை  ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார் இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியகத்தின் செய்தித்தொடர்பாளரான உபுல் தேசப்பிரியா. இருப்பினும் மரண தண்டனையில் இருந்து அவரை மீட்கும் பொருட்டு இலங்கை அரசு  அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு மட்டும் இலங்கையில் இருந்து சுமார் 3 லடசம் பேற் மத்திய  கிழக்கு நாடுகளில் சென்று பணிபுரிந்து வருகின்

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

சீனக்குடாவில் ரயிலில் மோதுண்டு இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக சீ னக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

சீனன் குடா பகுதியில் தனது காதுகளுக்குள் கெட் செட்டை வைத்த வண்ணம் புகையிரதம் வருவதறியாது இருந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது சமூகத்திற்கான பாரிய இழப்பென்பதை விட எமது சமுக இளைஞர்களுக்கு ஓர் பாடமாக அமைகின்றது. மூதூர் நியுஸ் அன்னாருக்கு பிரார்த்தனை செய்வதோடு ஏனையவர்களுக்கும் விழிப்புணர்வு செய்யுமாறும் வேண்டிக் கொள்கின்றது. சீனக்குடாவில்  ரயிலில் மோதுண்டு இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக சீ னக்குடா  பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பாலையூற்று கிராமத்தைச் சேர்ந்த றியாஸ் மொஹமட் ரினாஸ் (வயது 18) என்ற இளைஞனே மேற்படி ச - See more at: http://www.madawalanews.com/2015/10/18_20.html#sthash.9HPTCqLU.dpuf சீனக்குடாவில்  ரயிலில் மோதுண்டு இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக சீ னக்குடா  பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பாலையூற்று கிராமத்தைச் சேர்ந்த றியாஸ் மொஹமட் ரினாஸ் (வயது 18) என்ற இளைஞனே மேற்படி ச - See more at: http://www.madawalanews.com/2015/10/18_20.html#sthash.9HPTCqLU.dpuf சீனக்குடாவில்  ரயிலில் மோதுண்டு இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக சீ னக்குடா  பொலிஸார்

1 ஆம் திகதி தொடக்கம், ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பது தடை

எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் பிரதான ரயில் நிலையங்கள்  மற்றும் உப ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்கள போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சை கேட்பது, பாடல் பாடி பணம் கேட்பது  உட்பட அனைத்து வகையான யாசகம் கேட்கும் நடவடிக்கைகளும் இவ்வாறு  தடைசெய்யப்படவுள்ளது. பயணிகள் வழங்கிய முறைப்பாட்டையடுத்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க மேலும்